Thursday, February 21, 2013

Micromax Funbook P600 - Voice Call வசதியுடன் உள்ள Android Tablet



Smartphone போலவே Tablet வாங்கவும் நிறைய பேர் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அதற்கு உகந்த வகையில் பல நிறுவனங்கள் Tablet - களை வெளியிட்டு வருகின்றன. Micromax நிறுவனம் இதுவரை பல Tablet களை வெளியிட்டுள்ளது. தற்போது அதன் புதிய வெளியீடு Micromax Funbook P600. Voice Call வசதியுடன் வரும் இந்த Android Tablet விலை 
LKR: 22,372.29 ரூபாய்* என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விபரங்களை பார்ப்போம். 

370 கிராம் எடையுடைய இந்த Tablet கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. Android ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இது Android 4.0 Ice Cream Sandwich - ஐ கொண்டுள்ளது. இது தமிழ் படிக்கும் வசதி உடைய Android Version ஆகும். 2 MP மெயின் கேமராவை பின்னால் கொண்டுள்ளது. அதே போல முன்னாலும்  ஒரு கேமராவை கொண்டுள்ளது. இதை வீடியோ கால் போன்ற வசதிகளுக்கு நீங்கள் பயன்படுத்தலாம்.

இது 7 Inch TFT Capacitive Touch Screen உடன் வருகிறது. இதில் Multi Touch வசதி சப்போர்ட் செய்கிறது.

இது 512 MB RAM, 4 GB ROM மற்றும் 1 GHz Cortex-A5 Dual Core கொண்டுள்ளது. இதன் இன்டர்னல் மெமரி 2GB மற்றும் 32 GB வரை Micro-SD கார்டு உள்ளிடும் வசதியும் உள்ளது.அத்தோடு இது Lithum Polymer வகை பேட்டரியுடன் வருகிறது. 

இவற்றோடு 3G, Wi-Fi. HDMI Port போன்ற சிறப்பம்சங்களும் உள்ளது இதில்.

இதே தகவல்கள் ஆங்கிலத்தில் கீழே
Micromax Funbook P600 Specifications
Operating SystemAndroid OS 4.0.4 (Ice Cream Sandwich)
Display7.0-inch (480 x 800 pixels) TFT Capacitive Touch screen,16 M Colors
Sim CardYes, Voice call supported
Processor1 GHz Cortex-A5 Dual Core Processor
RAMRAM 512 MB, ROM 4 GB
Internal Memory2 GB
External MemorymicroSD (up to 32GB)
Camera2 MP  Rear Camera, Front camera also available
BatteryLithum Polymer battery. Stand By Time: 224 hrs & Browsing Time: 4 hrs
Features 3G, HDMI, Wi-Fi, Micro USB v2.0

Review:

Voice Call Support இருப்பதால் தான் விலை கொஞ்சம் அதிகமாக உள்ளது என்று நினைக்கிறேன். மற்றபடி சாதாரண Tablet தான் இது. கொஞ்சம் விலை குறைவாக இருந்தால் வாங்கலாம். 

Saturday, February 9, 2013

Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்



வெறும் பேசுவதற்கு மட்டும் அலைபேசி என்று இருந்த காலம் எல்லாம் போய், எல்லாவற்றுக்கும் அலைபேசியே போதும் எனும் அளவுக்கு திகட்ட திகட்ட வசதிகளுடன் அலைபேசிகள் வந்துவிட்டன. அப்படிப்பட்ட  Smartphone- களை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய தகவலகள் என்ன? பதிவில் அதை பார்ப்போம்.

ஏன் Smartphone ?

உங்களுடைய செயல்கள் அனைத்தையும் ஸ்மார்ட் ஆக செய்ய உதவுகிறது இது. எந்த ஒரு செயலுக்கும் தனித் தனியாக Application என்று கணினி போல இருப்பதால் மிக எளிதாக உங்கள் வேலை முடிந்து விடும். Smartphone- இல் பெரும்பாலான பயன்பாடுகள் இணையம் சார்ந்தே இருக்கும். உங்கள் தினசரி வேலையில் இருந்து, உங்கள் தொழில் வரை அனைத்துக்கும் உதவும் வகையில் செயல்படுகின்றன. எங்கே இருந்து வேண்டுமானாலும், நீங்கள் நினைத்த வேலையை செய்து முடித்திடலாம்.

விலை (Price) :

எல்லோருக்கும் முதலில் இதை சொல்லி விடுவது உத்தமமாய் இருக்கும். முதலில் நீங்கள் எவ்வளவிற்கு வாங்க போகிறீர்கள் என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள். அதன் பின் கீழே உள்ளவற்றை பொறுத்து உங்கள் பணத்திற்கு ஏற்ப ஒரு அலைபேசி வாங்கி விடலாம். 

இயங்கு தளம் (Operating System) :


எந்த ஒரு ஸ்மார்ட்போனும் ஏதேனும் ஒரு இயங்கு தளத்தில் (OS) தான் இயங்கும். இதில் பிரபலமானவை iOS, Android, Windows, Blackberry, Symbian. இதில் iOS என்பது ஆப்பிள் நிறுவன அலைபேசிகளில் மட்டும், Blackberry என்பது Blackberry நிறுவன அலைபேசிகளில் மட்டும், Symbian என்பது நோக்கியா அலைபேசிகளில் மட்டுமே. 

இதில் ஆப்பிள் விலை பற்றி சொல்லவே வேண்டாம், கொஞ்சம் அதிகம் பணம் உள்ளவர்கள் தான் வாங்க முடியும் என்ற போதும் இதன் மிகப் பெரிய பலன் Upgrade வசதி. நீங்கள் எப்போது வாங்கி இருந்தாலும், புதிய Version OS  வெளியாகும் போது அதற்கு Upgrade வசதி தரப்படுகிறது. இதனால் புதிய வசதிகளை எளிதாக பெற முடியும். 

அதே போல தான் Blackberry, ஆப்பிளை விட விலை குறைவு என்ற போதிலும், இதன் கட்டமைப்பு, பயனர் இடைமுகப்பு (User Interface) போன்றவை எல்லாரும் பயன்படுத்த உகந்ததாக இல்லை என்பது ஒரு குறை. இது Business சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகப் பொருத்தமான அலைபேசி. இதிலும் Upgrade வசதி வழங்கப்படுகின்றன. 

2010 ஆம் ஆண்டு வரை Smartphone உலகின் ராஜாவாக இருந்த Symbian, அதன் பின்னர் Android வளர்ச்சியால் அடிவாங்க ஆரம்பித்து, இன்று அடியோடு நின்றுவிட்டது. இதை வாங்குவதை தவிர்ப்பது நலம்.

அடுத்த நிறைய பேரின் வேட்கையான ஆன்ட்ராய்ட் (Android), இந்தியர்களின் ஸ்மார்ட்போன் கனவை நனவாக்கியது இது தான். விலை குறைவு, அதிக வசதிகள், பெரும்பாலும் இலவசம் என்ற அதிரடிகளுடன் மிகப் பெரிய மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து வருவதால் கூகுளின் இந்த பிள்ளை நன்றாகவே வளர்கிறது. இதில் ஒரு பிரச்சினை குறிப்பிட்ட மாடல் அலைபேசி ஒன்றை நீங்கள் வாங்கும் போது Upgrade என்பது எல்லா முறையும் கிடைக்காது. உதாரணமாக 2.3 OS வந்த போது வாங்கியவர்கள் பெரும்பாலும் 4.1  OS வரை Upgrade செய்ய வாய்ப்பு பெற்றார்கள். ஆனால் அதற்கு பிறகு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. இந்த கேள்விக்குறி கூட இல்லாமல் 2.3 OS - யில் நின்று விட்டவர்கள் பலர். ஆனால் Upgrade எல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள் 2.3 OS இருந்தால் ஒரு ஆன்ட்ராய்ட் போனை கண்டிப்பாக வாங்கலாம். அதற்கு கீழ் போக வேண்டாம். 

அடுத்து Windows OS. நம் கணினியில் இயங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பான இது போன் மாடல்களினால் தடுமாறி வருகிறது. இயங்கு தளத்தில் பிரச்சினை இல்லை என்ற போதும் Phone Specification இதை வாங்க வேண்டுமா என்று உங்களை யோசிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் மிக எளிதான Interface, செயல்பாடை விரும்புபவர்கள் இதை வாங்கலாம். குறைந்தபட்சம் 7.5 தெரிவு செய்யவும். 

வடிவமைப்பு, டிஸ்ப்ளே  (Body, Display): 



ஒரு போன் வாங்கும் அது பார்க்க எப்படி உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். இதில் எடை, அளவு போன்றவை Body என்பதன் கீழ் வரும். இதில் நீங்கள் குறிப்பாக கவனிக்க வேண்டியது. எடை. பெரும்பாலும் எடை குறைவாக இருக்கும்படி பார்க்கவும். 

அடுத்து Display, இது மிக முக்கியமான ஒன்று. எப்படியும் Touch Screen போன் தான் வாங்க போகிறீர்கள். அப்படி என்றால் அது என்ன வகை என்று நீங்கள் பார்க்க வேண்டும். Resistive, Capacitive என்ற இரண்டு வகை உள்ளன. இதில் நீங்கள் சமரசமே இல்லாமல் தெரிவு செய்ய வேண்டியது Capacitive Touch Screen. தப்பித் தவறி Resistive வாங்கி விட்டால், இங்க் ரப்பர் பயன்படுத்துவது போலத்தான், போனை போட்டு தேய்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்றபடி Capacitive தெரிவு செய்யும் நீங்கள் கொடுக்கும் விலைக்கு ஏற்ப TFT, AMOLED மற்றும் பல  Features கிடைக்கும். அதோடு நீங்கள் வாங்கும் போன் MultiTouch Support செய்கிறதா என்று கேட்டுக் கொள்ளுங்கள், குறைந்த பட்சம் இரண்டு விரல்கள் கட்டாயம் தேவை. விளையாட்டு ரசிகர்களுக்கு இது அவசியம்.  

Display Size என்பது உங்கள் விருப்பம். ஆண் என்றால் 4 இஞ்ச்க்கு மேல் வாங்கினால் எங்கே வைக்க போகிறீர்கள் என்று யோசித்து வாங்க வேண்டும். ஏன் என்றால் சில நேரங்களில் பெரிதாக வாங்கி விட்டால் பிறகு உங்கள் போனுக்கு தனியாக அளவெடுத்து பாக்கெட் தைக்க வேண்டி வரலாம். பெண்களுக்கு பிரச்சினை இல்லை. iPad போல 10 இஞ்ச் என்றாலும் வாங்கி வைத்துக் கொள்ளலாம். 

நினைவகம் (Memory) : 


அடுத்து மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. Smartphone - கள் கணினி போலவே RAM, Internal Memory போன்றவற்றோடு வருகின்றன. எனவே உங்கள் விலைக்கு எது சிறந்தது என்று பார்த்து வாங்க வேண்டும். RAM 512MB குறைந்த பட்சம் இருந்தால் நலம், அதே போல Internal Memory குறைந்த பட்சம் 150 - 200 MB அவசியம். 

External Memory பெரும்பாலும் MicroSD Card Support செய்வதாக வந்து விட்டது. அது 32GB வரை இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

கேமரா (Camera): 


பெரும்பாலும் எந்த Phone வாங்கும் போதும் கவனிக்க வேண்டிய விஷயம் இது. எத்தனை மெகா பிக்ஸல் கேமரா என்று முடிவு செய்து கொண்டு வாங்க வேண்டும். அதோடு உங்களுக்கு Flash முக்கியமானதாக இருந்தால் அதையும் கவனிக்க வேண்டும். இல்லையென்றால் இரவில் படம் எடுக்கும் போது உங்களுக்கு சிரமம்.

Video Recording என்பதையும் இதில் கவனிக்க வேண்டும். 5MP Camera என்றாலே 720p(தரமான வீடியோ) அளவுக்கு Video Recording வசதி வந்துவிட்டது. 5MP வாங்கி விட்டு VGA Recording(தரம் குறைவான வீடியோ) செய்து கொண்டிருந்தால் வீண்தான். 

வீடியோ Calling வசதி வேண்டும் என்பவர்கள் சிரமப்படாமல் இருக்க Front Camera இருக்கும் போன் ஒன்றை வாங்கி கொள்ளுங்கள்.

ப்ராசஸர்  (Processor): 




மிக மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விசயம் இது. உங்கள் போனுக்கு இதயம் போன்ற பகுதி இது தான். இதில் நான் Chip-set, GPU என்றெல்லாம் குழப்ப விரும்பவில்லை. குறைந்த பட்சம் 800Mhz இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பாட்டரி (Battery) : 



எல்லாமே சரி. பாட்டரி எவ்வளவு நேரம் தாங்கும் என்பது தான் ஒரு போனுக்கு மிகவும் முக்கியமான விஷயம். இதில் Smartphoneகளுக்கு 1100 போல பத்து நாள்  சார்ஜ் தாங்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நீங்கள் வாங்கும் பாட்டரி லித்தியம் அயான்(Li-Ion) ஆக இருக்க வேண்டும், அதுவும் குறைந்த பட்சம் 1500 mAh தெரிவு செய்தால் தான் ஒரு நாள் முழுமைக்கும் சார்ஜ் இருக்கும் (உங்கள் பயன்பாடுகளை பொறுத்து).

இணையம் & இணைப்புத்தன்மை (Internet & Connectivity):

நீங்கள் வாங்கும் மொபைல் 3G enabled Phone தானா என்று உறுதி செய்து கொள்வது அவசியம். அதே போல Bluetooth, Wi-Fi, GPS, USB வசதி போன்றவை இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். Bluetooth Version குறைந்த பட்சம் 2.1+ EDR ஆக இருத்தல் நலம்.

ப்ரௌசெர் HTML வசதியுடன் வரும், அதே சமயம் Flash இருந்தால் இன்னும் சிறப்பு.

இவையே ஒரு Smartphone வாங்கும் போது கண்டிப்பாக கவனிக்க வேண்டிய அம்சங்கள். வேறு ஏதேனும் முக்கியமாக கவனிக்க வேண்டும் என்று தோன்றினால் கமெண்ட் மூலம் சொல்லுங்கள். உங்களுக்கு வாங்குவதில் சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்.

Saturday, February 2, 2013

ஆன்ட்ராய்ட் என்றால் என்ன?




தகவல் தொழில்நுட்பத் துறையில் கணினிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய சந்தைப் பொருள் மொபைல் போன்கள் ஆகும். கணினிகளில் நாம் செய்யும் கிட்டத்தட்ட அனைத்து வசதிகளும் தற்போது மொபைல்களில் வந்துவிட்டன. மொபைல் சந்தைகளின் எதிர்காலத்தை ஓரளவு கணித்த கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் இயங்குதளம் மூலம் மொபைல் சந்தையில் களமிறங்கியது.

ஆன்ட்ராய்ட் என்பது மொபைல் (Smartphone) மற்றும் டேப்லேட் கணினிகளுக்கான (Tablet PC) இயங்குதளமாகும். இது லினக்ஸ் கெர்நெல் (Linux Kernel) என்னும் இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் இதில் சில மாற்றங்களை செய்து வெளியிட்டது கூகுள்.

ஆன்ட்ராய்ட் பதிப்புகள் (Android Versions):

ஆன்ட்ராய்ட் இயங்குதளம் தொடர்ந்து மேம்படுத்தப்படும். ஒவ்வொரு தடவை மேம்படுத்தப்படும் போதும் பழைய பதிப்பில் உள்ள பிழைகள் களையப்பட்டு புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு பதிப்பிற்கும் இனிப்புவகை உணவுகளின் பெயர்களை வைத்துள்ளது கூகுள்.

இதுவரை வந்துள்ள பதிப்புகளின் பெயர்கள்:


சமீபத்திய பதிப்பு Ice Cream Sandwich (V4.0) ஆகும். ஆன்ட்ராய்ட் புதிய பதிப்பு வந்தவுடனேயே நீங்கள் அதனை பெற முடியாது. நீங்கள் வைத்திருக்கும் மொபைல் மாடலுக்கு உங்கள் மொபைல் நிறுவனம் அந்த வசதியை கொடுக்கும் போது தான் நீங்கள் பெற முடியும்.

ஆன்ட்ராய்ட் சிறப்பம்சங்கள்:


1. Customize Home Screen - மொபைலின் முகப்பு பக்கத்தை நம் விருப்பப்படிWidget-களை வைத்துக் கொள்ளலாம்.

2. Threaded SMS - நாம் அனுப்பும் எஸ்எம்எஸ்கள் வழக்கமான தோற்றத்தில் இல்லாமல், Threaded SMS என்ற புதிய தோற்றத்தில் இருக்கும். Chat-ல் இருப்பது போன்று ஒருவருடன் நாம் அனுப்பும்/பெறும் எஸ்எம்எஸ்கள் ஒரே வரிசையில் இருக்கும்.

3. Web Browser - கணினிகளில் பயன்படுத்தும் உலவி போன்றே இதுவும் பயன் தருகிறது. முழுமையான FLASH வசதி இருப்பதால் யூட்யூப் போன்ற விடியோக்களை பார்க்கலாம். தற்போது வந்துள்ள ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பில் க்ரோம் உலவியின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

4. Google Apps - கிட்டத்தட்ட அனைத்து ஆண்ட்ராய்ட் மொபைல்களிலும் கூகுள் அப்ளிகேஷன்கள் Default-ஆக நிறுவப்பட்டிருக்கும்.

4. Voice Action - இது கூகுள் அப்ளிகேசன் ஆகும்.  உங்கள் குரல் மூலமாகவே உங்கள் மொபைலை இயக்கலாம். அதாவது கால் செய்யலாம், எஸ்எம்எஸ் அனுப்பலாம், பாடல் கேட்கலாம். இது ஆங்கில மொழிக்கு மட்டும் தான். (ஆங்கிலத்தில் பேசினாலும் என் குரலை புரிந்துகொள்ளவில்லை. :) :) :)

5. ScreenShot - மொபைல் திரையில் தெரிவதை எளிதாக ஸ்க்ரீன்ஷாட் எடுக்கலாம். (மேலே உள்ள படம் அப்படி எடுத்தது தான்).

மேலும்  பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. முழுமையாக படிக்கவிக்கிபீடியாவில் பார்க்கவும்.

ஆன்ட்ராய்ட் பயன்பாடு:

ஆன்ட்ராய்ட் மொபைல் (அல்லது டேப்லட்) வாங்கியவுடன் அதனை உங்கள் கூகுள் கணக்குடன் இணைக்க சொல்லும். அப்படி இணைத்தால் தான் Android Application Market உள்பட மேலதிக வசதிகளை பயன்படுத்த முடியும்.

ஆன்ட்ராய்டில் பல வசதிகள் இருந்தாலும் இது அளவில்லாத இணைய இணைப்பு (Unlimited Internet Connection) உள்ளவர்களுக்கு மட்டுமே பயனாகும். ஏனெனில் பல அப்ளிகேசன்கள் இணைய இணைப்பில் தான் வேலை செய்கிறது.

Android Market:

ஆன்ட்ராய்ட் மார்க்கெட் என்பது ஆன்ட்ராய்ட் அப்ளிகேசன்களை பதிவிரக்குவதர்கான சந்தை ஆகும். இங்கு இலவசமாகவும், பணம் கொடுத்தும் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணம் கட்டி வாங்கும் அப்ளிகேசன்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பதினைந்து நிமிடத்திற்குள் திரும்பக் கொடுத்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆன்ட்ராய்டில் பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் இதிலும் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. இறைவன் நாடினால் இதைப்பற்றி தனிப பதிவில் பார்ப்போம்.

இணையம் எப்படி செயல்படுகிறது? விரிவான தகவல்கள்..!



நாளொரு மேனியும், பொழுது ஒரு வண்ணமுமாக தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் பல பரிமாணங்களைக் கடந்துதான் இந்நிலையை எட்டியிருக்கிறோம் என்பதை நாம் மறக்க இயலாது.. 
what is internet

இன்டர்நெட் என்றால் என்ன?
இன்றையப் பதிவான இணையம் இயங்குவது எப்படி? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்...

ஏதோ என்னிடத்தில் கணினி இருக்ககிறது.. இணைய வசதியை அளிக்க பல நிறுவனங்கள்(Internet Provider) இருக்கிறது.. விண்ணப்பித்த உடனே இணைய இணைப்பும்(Internet) கிடைத்துவிடுகிறது.. பிறகென்ன இணையத்தில் உலவ வேண்டிதுதான்.. உலவுதல்.. உலவுதல்.. மேலும் இணைய உலவுதல்தான்(Internet Browsing).

வேண்டியதைத் தேடிப் பெற... வேண்டாத்தையும் சென்றுப் பார்க்க... கல்வி பயில.. கற்றதை பலருக்கும் தெரிவிக்க... இப்படி பலதையும் செய்து பயன்பெற்றுக்கொண்டிருக்கிறோம்.. 

ஆனால் இந்த இணையம் எப்படி செயல்படுகிறது?.. எங்கிருந்து இத்தகைய கோடிக்கணக்கான தகவல்கள் கிடைக்கிறது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடைகளைத் தேடினால் இணையம் எப்படி செயல்படுகிறது? என்பதை அறிந்துகொள்ளலாம்.

ஆம் நண்பர்களே.. இணையம் என்ற சொல்லுக்கு பொருள் என்ன தெரியுமா? இணைப்பது என்பதுதான்..ஒருவரை.. இருவரை.. ஏன் பல்லாயிரக்காணவர்களை இணைப்பதுதான் இணையம்.. இன்னும் ஆழ நோக்கினால் எங்கெங்கோ, உலகத்தில் ஏதோ மூலையில் இருக்கும் கணினியிலுள்ள (server) தகவல்களை எடுத்து வந்து நம் கணினியுடன் இணைப்பதுதான் இணையம்.  நாம் உள்ளிட்ட முகவரியுடைய தளத்தை  நமக்கு உடனுக்குடன் வழங்குவதுதான் இணையம்.. இவ்வாறு ஒரு பக்கத்தை உள்ளிடப் பயன்படும் கணனியையும். நான் தேடிய பக்கத்தை வைத்திருக்கிற கணினியையும் இணைப்பதுதான் இணையம். உலகத்திலுள்ள இப்படிப்பட்ட server computer, personal computer என பலவாறு இருக்கும் கணினி, மற்றும் வழங்கிகளுக்கிடையே தொடர்பை ஏற்படுத்தி வேண்டிய பக்கங்களையும் தகவல்களையும் பெற்றுத்தருவதே இணையம். இவற்றை ஆங்கிலத்தில் இதை Internet என்பார்கள். 

இணையம் எவ்வாறு செயல்படுகிறது? 
(? How does the Internet work?)
உங்கள் கணினியில் இணையத்தைப் பயன்படுத்த என்ன செய்வீர்கள்? கணினியை உயிர்ப்பித்து அதிலுள்ள Browser ஒன்றினை இயக்கி.. அதிலுள்ள Address Bar -ல் ஏதேனும் தளத்தின் URL கொடுப்பதன் மூலம் இணையத்தை அடைகிறீர்கள் அல்லவா? இது எப்படி நடக்கிறது. அதாவது நாம் URL - கொடுத்தவுடன் go பட்டனையோ அல்லது Enter பட்டனையோ தட்டிவிட்டால் நாம் கொடுத்த பக்கமானது திறந்துகொள்கிறது.. இந்தப் பக்கம் எங்கிருந்து வருகிறது? எப்படி வருகிறது? எதனால் வருகிறது? ஏன் வருகிறது? 
working method of internet connection
இணையம் செயல்படும் விதம்.

இதெல்லாம் கம்ப்யூட்டர் செய்யும் மாயம் என்கிறீர்களா? ம்ம்.. நீங்கள் சொல்வதும் ஒருவகையில் சரிதான். ஆனால் கம்ப்யூட்டர் என்ன மாயாஜால வித்தையா கற்று வைத்திருக்கிறது.. இல்லை.. அது நம்மைப்போன்ற மனிதனால் உருவாக்கப்பட்ட ஒரு சாதனம். அவ்வளவே.. இதற்கு மாயாஜாலமும் தெரியாது.. மண்ணாங்கட்டியும் தெரியாது.. 

சரி..பதிவிற்கு வருவோம்.. நீங்கள் இணையத்தை நாட Browser கிளிக் செய்து url கொடுக்கிறீர்கள் அல்லவா? இந்த Browser -ஐ கிளையண்ட் என்பார்கள்.. இந்த பிரவுசர்.. எந்த நிறுவனத்தினுடையதாகவும் இருக்கலாம். உம். நான் அடிக்கடிப் பயன்படுத்தும், firefox, Google Chrome, Opera, Internet Explorer போன்றவை. 

இந்த கிளையண்ட்கள் என்ன செய்கின்றன தெரியுமா? நாம் உள்ளிட்ட URL நமக்கு இணைய இணைப்பு வழங்கிய ISP Server-க்கு அனுப்புகிறது.. இணைப்பு வழங்கிய சர்வரா? குழம்ப வேண்டாம்.. உங்களுக்கு இணைய இணைப்பைப் பெற்றுத் தரக்கூடிய BSNL, Airtel, Relience, Aircel இதுபோன்ற நிறுவனங்களின் சர்வரைத்தான் ISP Server- என்கிறோம். 

இந்த சர்வரானது தான் இணைக்கப்பட்ட மற்றொரு சர்வருடன் தொடர்புகொள்கிறது. அந்த சர்வரானது மற்றொரு சர்வருடன் தொடர்புகொள்கிறது.. இப்படி சங்கிலித்தொடராக இறுதியில் நாம் தேடும் தகவலடங்கிய சர்வருடன் இணைகிறது. இவ்வாறு நாம் உள்ளிட்ட URL இருக்கும் சர்வரை அடைகிறது. இவ்வாறு நாம் உள்ளிட்ட தகவலானது Very High Speed network என்னும் வழியில் வேகமாக உரிய சர்வரை வேகமாக சென்றடைகிறது. 

உரிய சர்வரை அடைந்ததும் அதிலுள்ள தகவல்கள் சிறு சிறு பொட்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, மீண்டும் அதே வழியில் தகவல்கள் நீங்கள் இணைந்திருக்கும் ISP , உங்களுக்கு இன்டர்நெட் சர்வீஸ் வழங்கும் சர்வருக்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து உங்களுடைய கணினிக்கு அந்த வலைத்தளத்தின் பக்கம் வந்தடைகிறது. நீங்கள் பிரௌசரில் உள்ளிட்ட தகவலனைத்தும் இவ்வாறுதான் உங்களுக்கு வந்தடைகிறது. இவ்வாறு நீங்கள் உள்ளிட்ட தகவலைப் உரிய சர்வரைச் சென்று மீண்டும் தகவலைப் பெற்று மீண்டும் உங்கள் கணினிக்குத் திரும்பும் நேரம் ஒரு சில விநாடிகளே...!

நாம் உள்ளிட்ட URL - ஐ கணினி எப்படி புரிந்துகொள்கிறது?

கணினிக்கு எழுத்துகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் இல்லை.. கணினி என்றாலே 0,1 என்ற முறைதான்.. இன்னும் சொல்லப்போனால் கணினி ஆன், ஆப் என்ற இருமுறையில்தான் புரிந்துகொள்கிறது. அதாவது true or false.. ஒன்று அல்லது பூஜ்ஜியம்..இதைப்பற்றித் தெளிவாகப் படிக்க Unicode எழுத்துருவிற்கு நன்றி என்ற பதிவைப் படிக்கவும். 

கணினிக்கு நீங்கள் உள்ளிட URL படிக்கத் தெரியாது என்பதால் இவற்றை கணினி புரிந்துக்கொள்ள கூடிய மொழியில் மாற்றி அமைக்கவேண்டியது அவசியம். இதற்கு protocol என்ற முறை பயன்படுகிறது. இந்த புரோட்டோகால் என்பது இரண்டு கணினிகளுக்கிடையாயான தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய முறையாகும். HTT, FTP, SMTP, WiFi, TCPIP என பல வகைகளாக இருக்கிறது. பொதுவாக TCP, IP ஆகியவைகளையே பெரும்பான்மையாக பயன்படுத்துகிறோம். 

இணையத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு கணினிக்கும் ஒரு IP Address தரப்படுகிறது. இந்த IP அட்ரசானது நம்முடைய முகவரியைப் போல எழுத்தில் இருக்காது. இவ்வாறு IP ADDRESS எண்களாக இருக்கும். இந்த எண்கள் 0 தொடங்கி 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். உதாரணமாக யாஹூ தளம் உள்ள சர்வரின் IP Address 82.248.113.14 ஆகும். இந்த எண் இந்த தளத்தின் நிலையான எண் ஆகும். 

நீங்கள் ஒவ்வொரு முறையும் இணையத்தில் இணையும்போது ISP உங்கள் கணினிக்கென ஒரு தற்காலிக IP Address கொடுக்கப்படும். நிரந்தரமில்லாத இந்த IP Address ஆனது நீங்கள் இணையத்தில் இணைந்திருக்கும் வரை மட்டுமே செயல்படும். இணையத்தை விட்டு வெளியேறிய பிறகு மீண்டும் இணையத்தை தொடங்கும்போது மீண்டும் புதிதாக IP Address உங்கள் ISP வழங்கும். காரணம் உங்களைப் போன்றவர்கள் லட்சக்கணக்கானவர்களுக்கு உங்களுடைய ISP நிறுவனத்துடன் இணைந்திருப்பார்கள். ஒரே நேரத்தில் பல லட்சக்கணக்கான கம்ப்யூட்டர்களை இன்டர்நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் இவ்வாறு IP அட்ரஸ் நிலையாக கொடுக்காமல், அவ்வப்போது IP ADDRESS கொடுக்கப்படுகிறது. 

இந்த எண்கள் நான்கு இலக்க எண்களின் தொடராக இருக்கும். ஒவ்வொரு எண்ணையும் ஒரு புள்ளி வைத்து பிரித்திருப்பார்கள். அதாவது இவ்வாறு இருக்கும். 64.233.167.104 இந்த எண்களினால் ஆன முகவரி இணையத்தின் மிக முக்கியமானதாகும். 

ஏனெனில் இந்த முகவரியை வைத்துதான் Internet-ல் வேண்டுகோள் வைத்த கம்ப்யூட்டர் எது? எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல்கள் வரவேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும். TCP என்பது Transmission Control Protocol என்பதின் குறுக்கமாகும். இது அனுப்பபடும் தகவல்களை சிறு சிறு பொட்டலங்களாக (Pockets)பிரித்து, மீண்டும் சேர வேண்டிய இடத்தில் தகவல்களை மீண்டும் உள்ளவாறே சரியான முறையில் இணைத்து கொடுக்கும். இதுதான் TCP என்று சொல்லப்படுகிற Transmission Control Protocol ன் வழிமுறையாகும்.

எனவேதான் இந்த ஐபி அட்ரஸ் ஆனது மிக முக்கியத்துவம் பெறுகிறது.. வேண்டுகோள் விடுத்த ஐ.பி அட்ரஸ் உடைய கணினிக்கும், தகவல்களை கொடுக்கிற கணிக்கும் இடையே ஒரு இணைப்பு பாலமாக விளங்குவது இணையம். வேண்டுகோள் விடுத்த கணினியையும், வேண்டிய தகவலடங்கிய கணினியையும் அடையாளப்படுத்தவே இந்த IP முகவரிகள். இப்போது தெளிவாக புரந்திருக்கும் என நினைக்கிறேன்.

இந்த வீடியோவைப் பாருங்கள் இன்னும் எளிமையாக விளக்கியிருக்கிறார்கள்...இப்பதிவினுடைய அனைத்து கருத்துகளையும் உள்ளடக்கியுள்ளது இந்த வீடியோ.. தவறாமல் வீடியோவைப் பாருங்கள்.. உங்கள் கருத்துகளைப் பகிர்ந்துக்கொள்ளுங்கள். 



இவ்வாறுதான் நாம் இணையத்தில் இணைகிறோம்.. நம்முடைய கணினிக்கு, உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் கணினியிலுள்ள தகவல்கள், தரவுகள் நம்மை வந்தடைகின்றன..

குறிப்பு: ISP - INTERNET SERVICE PROVIDER - இணைய இணைப்பு வழங்குநர்.
IP- INTERNET PROTOCOL - இணைய நெறிமுறை
SERVER - வழங்கி (கணினி) - சேவையகம்.