Tuesday, May 9, 2017

மனித மூளையைக் கொண்டு கணனியைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தில் புதிய முன்னேற்றம்!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு மனித மூளையிலிருந்து அனுப்பப்படும் சமிக்ஞைகளுக்கு ஏற்ப கணினியை இயங்க வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Brain-Computer Interface (BCI) என அடையாளம் காணப்படும் இத்தொழில்நுட்பம் தொடர்பில் கடந்த 50 ஆண்டு காலமாக உலகிலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறிருக்கையில் Elon Musk மற்றும் Bryan Johnson ஆகிய இருவரும் தாம் இந்த தொழில்நுட்பத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பான வீடியோ ஒன்றினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை மூளையிலிருந்து பிறப்பிக்கப்படும் சமிக்ஞையின் ஊடாக பொருட்களை இயக்கும் தன்மை குரங்குகளிடம் காணப்படுகின்றன.
அதாவது தமது மூளையிலிருந்து வரும் சமிக்ஞைகளை விரிவாக்கம் செய்து அதன் ஊடாக ஊசி ஒன்றினை குரங்குகளால் அசைக்க முடியும்.

இதே போன்ற செயற்பாட்டினை மனிதர்களில் உண்டாக்குவதன் ஊடாக கணனிகளையும் கட்டுப்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

Thursday, April 27, 2017

ஏடிஎம் கார்டு பயன்படுத்துவீர்களா? இதை கொஞ்சம் படிங்க

 அனைத்து இடங்களிலும் ஏடிஎம் கார்டை பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது.

கடைகளுக்கு சென்றாலும் அங்கு பணம் செலுத்துவதற்கு ஏடிஎம் கார்டைதான் உபயோகிக்கின்றோம்.
ணபரிவர்த்தனைகளுக்கு இது எளிதாக இருந்தாலும் ஆபத்து நிறைந்தது. அனைத்து இடங்களிலும் நாம் கார்டினை பயன்படுத்துவது பாதுகாப்பாக இருப்பதில்லை. எளிதாக நமது வங்கி கணக்கின் விவரங்களை திருடிவிடும் அபாயமுள்ளது.
மால்வேர்(Malware)
மால்வேர் என்னும் மென்பொருளினை பயன்படுத்தி நமது லேப்டாப், கணினி, செல்போன்களில் உள்ள நமது கார்டு பற்றிய தகவல்களை திருடிவிடலாம்.
இதுமட்டுமல்லாது ஏடிஎம்-களில் இந்த மென்பொருளை பதிவேற்றில்விட்டால் அங்கு பயன்படுத்தப்படும் அனைத்து கார்டுகளின் விவரங்களையும் எளிதாக அறிந்து கொள்ளலாம்.
குளோனிங்(Cloning)
நமது கார்டினை போன்று புதிதாக ஒரு கார்டினை உருவாக்குவது குளோனிங் எனப்படுகிறது. பி.ஓ.எஸ். என்னும் இயந்திரங்களில் கார்டினை உபயோகிக்கும் போது நமது தகவல்கள் திருடப்பட்டு போலி கார்டுகள் உருவாக்கப்படுகின்றன.
ஸ்கிம்மிங்(Skimming)
ஏடிஎம் இயந்திரங்களில் இரகசிய கேமராவினை பொருத்தி அதன் மூலம் கார்டினை உபயோகிக்கும் போது அதன் ’பின்’ நம்பரை எளிதாக அறிந்து எளிதாக நமது வங்கி கணக்கில் இருந்து பணத்தினை திருடிவிடக்கூடும்.
பிஷிங்(Phishing)
ரிசர்வ் வங்கியில் இருந்து வருவதை போல் உங்கள் மெயிலுக்கு வங்கி கணக்கு எண், கார்டு குறித்த தகவல்கள் கேட்கப்படும். இதற்கு நாம் பதில் அளித்துவிட்டால் உடனடியாக நம் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
விஷிங், ஸ்மிஷிங்(Wishing and Smishing)
வங்கியிலிருந்து பேசுவதை போன்று யாராவது போன் செய்து உங்கள் வங்கி கணக்கு விவரங்களை கேட்பர். நாம் கூறிவிட்டால் உடனடியாக நம் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுவிடும்.
நமது மொபைல் எண்ணுக்கு ஏதெனும் இணைய தள லிங்க்குடன் மேசேஜ் வரும். நாம் தெரியாமல் அந்த பக்கத்திற்கு சென்றுவிட்டால் உடனே தகவல்களை திருடும் மென்பொருள் மூலம் சில விநாடிகளில் நமது தகவல்கள் திருடப்பட்டுவிடும். இது ஸ்மிஷிங் என்று அழைக்கப்படுகிறது.
இதிலிருந்து தப்பிக்க செய்ய வேண்டியவை
ஏடிம் கார்டு, கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதற்கு முன் கவனம் தேவை. கார்டினை பயன்படுத்தி பணம் எடுப்பதற்கும் பரிமாற்றம் செய்வதற்கு வரைமுறை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் உங்கள் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டாலும் குறைந்த பாதிப்பே ஏற்படும். இதற்கான வசதியினை பெரும்பாலான வங்கிகள் வழங்குகின்றன.
அடிக்கடி ஏடிஎம் பின் நம்பரை மாற்றி கொள்ளுங்கள். ஓ.டி.பி.(OTP) மற்றும் பின் நம்பரை யாரிடமும் தெரிவிக்காதீர்கள்.

Friday, April 21, 2017

இருக்கும் இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்க வேண்டுமா?

நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உலகை சுற்றிப் பார்க்க Virtual Travel Tool என்னும் கருவியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.
உலகின் எந்த மூலையில் இருக்கும் இடத்தையும் இதன்மூலம் சுற்றிப் பார்க்க முடியும்.
ஒரே ஒரு நிமிடத்தில்அமெரிக்காவிலிருந்து அவுஸ்திரேலியா செல்லலாம், குழந்தைகளுடன் சேர்ந்து இதையொரு விளையாட்டாகவும் விளையாடலாம்.

Thursday, March 16, 2017

அழிந்த பைல்களை மீண்டும் பெறலாம்- இதோ சூப்பரான சாப்ட்வேர்க


பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முதல் மருத்துவமனைகளிலும் கம்ப்யூட்டரின் பயன்பாடு அதிகம். அவசரத்திலோ அல்லது தெரியாமலோ ஏதாவது ஒரு முக்கியமான பைல்(File)-ஐ அழித்துவிட்டால் உடனடியாக நாம் தேடுவது Recycle Bin- ல் தான்.
ஒருவேளை அதிலிருந்தும் அழித்துவிட்டால் என்ன செய்வது?. அதற்கான தொழில்நுட்பம்தான் Recovery Software.
நம் மொபைலிலோ அல்லது கம்ப்யூட்டரிலோ இருந்து அழிக்கப்பட்டவற்றை நாம் இதை பயன்படுத்தி மீண்டும் பதிவு செய்து கொள்ள இயலும்.
Recuva
இது அழிக்கப்பட்ட பைல்களை(File) மீண்டும் பதிவு செய்து கொள்ள உதவும் Software-களில் ஒன்று. இந்த Software-ஐ Windows 10, Windows 8(8.1), Windows XP, Windows 7, Windows Vista போன்ற அனைத்து OS-களிலும் பயன்படுத்தலாம்.
சிறப்புகள்
கையாள்வதற்கு எளிதான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
CD, DVD, Pendrive போன்றவற்றில் அழிக்கப்பட்ட கூட பைல்களை மீண்டும் பதிவு செய்ய இயலும்.
Puran File Recovery Program
இதனை பயன்படுத்தி 50 வகையான பைல்களை(eg. Photo, song,document) மீண்டும் பதிந்து கொள்ளலாம்.
அனைத்து OS-களிலும் இதனை பயன்படுத்த இயலும். ஆனால்,பதிவு செய்யும் பைல்களின் அளவான மிக குறைவே.
இதனால் அலுவலகங்கள் போன்ற இடங்களில் இந்த Software-ஐ பயன்படுத்த முடியாதது இதில் உள்ள குறையாகும்.
பயன்படுத்தும் முறை
முதலில் கம்ப்யூட்டர் போன்றவற்றில் நாம் வேறு ஏதாவது பணி(Task) செய்து கொண்டிருந்தால், அதனை நிறுத்தி விடவேண்டும்.
Recovery Software-ஐ நமது கம்ப்யூட்டரில் பதிந்த கொண்ட பின்னர், அழித்த பைல்கள் தானாகவே Scan செய்து நமக்கு காட்டப்படும். அவற்றில் தேவையான பைல்-ஐ நாம் Restore செய்து கொள்ளலாம்.
இத்தகைய Software –கள் தக்க சமயத்தில் உதவியாக இருந்தாலும், சில சமயங்களில் தீங்கு விளைவிக்கின்றன. எனவே நாம் கவனமாக நம் தகவல்களை கையாள்வதே பாதுகாப்பானதாகும்.